News September 3, 2025
BREAKING நெல்லை: 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி, ராதாபுரம் தலைமை ஆசிரியை ரத்தினாள் சுமதி, மகாராஜா நகர் ஜெயேந்திர பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயந்திரன், வீரள பெருஞ்செல்வி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா புஷ்பராணி, ஆசிரியை பாக்கியலட்சுமி உள்ளிட்ட 9 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
Similar News
News September 5, 2025
நெல்லை: போலி இணையதளம் எச்சரிக்கை

பிரதமர் திட்டத்தின் பெயரில் போலி இணையதளங்கள் செயல்படுவதாகவும், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் செயல்பட வேண்டும் என நெல்லை இபிஎப்ஓ தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில் சுகாதாரம், கல்வி, ரயில்வே போன்ற 12 துறைகளில் ஆள்சேர்ப்பு நடப்பதாக விண்ணப்பங்களை கோறுகின்றன. இதை நம்பி தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். திட்டங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம்.
News September 5, 2025
சபாநாயகர் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி

கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் வ உ சிதம்பரனார் திருஉருவச் சிலைக்கு (5.9.2025) காலை 9 மணிக்கு அரசின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் ஆகியோர் மாலை அணிவிக்கின்றனர். நிகழ்ச்சியில் எம்பி, எம் எல் ஏக்கள் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
News September 5, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.04] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.