News March 19, 2025
BREAKING நெல்லை கொலையில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

நெல்லையில் நேற்று முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று அவரது உறவினர்கள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சம்பந்தம் ஏற்பட்டு உடலை பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளாத டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தற்காலிக பணியிட நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
முன்னீர்பள்ளம் தீ விபத்தில் புதிய தகவல்

திருநெல்வேலி ஆரைகுளத்தில் மகனின் திருமணத்திற்கு அழைக்காத கோபத்தில் தந்தை, மனைவி மற்றும் மற்றொரு மகனின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம் நடந்துள்ளது. இதில் மனைவி மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் 50 % காயங்களுடன் தந்தை உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். மூத்த மகனுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில் மனைவியுடன் அவர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். குடும்பத் தகராறு இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியது.
News August 25, 2025
மனைவியை ஆற்றில் மூழ்கடித்துக் கொன்ற கணவர்

அம்பாசமுத்திரத்தில் செல்லையா(31) தனது மனைவி காவேரியை(28) தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, போலீசில் சரணடைந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட காவேரியுடன் குடும்ப தகராறு இருந்ததாக தெரிகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காவேரியின் உடலை தேடி வருகின்றனர். வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் நிறுத்தப்பட்டு, நாளை மீண்டும் தொடரும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 25, 2025
நெல்லை: 2,240 கிராம செவிலியர் பணியிடங்கள்

நெல்லை: சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதாவில் கவர்னர் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்களைச் சரிசெய்து, அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்துள்ளதால் 2,240 கிராம சுகாதார செவிலியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.