News August 5, 2025
BREAKING: நெல்லையில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு

நெல்லை, சேரன்மகாதேவியை சேர்ந்த 16 வயது மாணவன் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி ஒருவரை இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்ததாக கூறப்படுகிறது. வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் மாணவி வீட்டில் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உறவினர்களான 5 சிறார்கள் இன்று மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதுக்குறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை.
Similar News
News August 6, 2025
நெல்லை: யோகா இயற்கை மருத்துவ படிப்பிற்கு அழைப்பு

நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 2025-26 கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். *ஷேர்*
News August 6, 2025
கவின் கொலை: ஷியாம் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு

நெல்லை கே.டி.சி. நகரில் கடந்த மாதம் ஐ.டி. ஊழியர் கவின் கொலை தொடர்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாகப் பேசி இருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் மீது நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
News August 6, 2025
BREAKING:நெல்லையில் அடுத்த கொலை

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே சங்கநேரியில் இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் சென்ற பிரபுதாஸ் (27), என்ற பட்டியலின வாலிபர் மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நண்பர் காயமடைந்தார். இந்த பயங்கர சம்பவம் குறித்து ராதாபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.