News March 22, 2025

BREAKING நெல்லையில் கனமழை அறிவிப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு இசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 15, 2025

நெல்லையில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு

image

2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 446 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 45 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 633 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இசக்கி பாண்டியன் என்பவருக்கு இன்று வழங்கியுள்ளனர்.

News August 15, 2025

நெல்லை: விபத்தில் ஒருவர் பலி; 15 பேருக்கு தீவிர சிகிச்சை

image

பாளை ஆச்சிமடத்தில் இன்று அதிகாலை டெம்போ டிராவலர் வேனும், அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சில் இருந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயமடைந்த 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News August 15, 2025

நெல்லை : VAO லஞ்சம் கேட்டால் இதை செய்ங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நெல்லை மாவட்ட மக்கள் 0462-2580908 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!