News January 2, 2026
BREAKING நாமக்கல் உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடு!

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட சின்னமுதலைபட்டி கடக்கால் வீதி தெருவில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மணிகண்டன் என்பவரது 4 வயது மகன் ரோகித் வீட்டின் அருகே பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி ஆழமுள்ள குழியில் நீரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருப்பதால் அந்த குழியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதற்கு இழப்பீடாக நாமக்கல் மாநகராட்சி சார்பில் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 5, 2026
நாமக்கல்: UPI அதிகம் யூஸ் பண்றீங்களா? UPDATE

நாமக்கல் மக்களே 123PAY UPI மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 8045163666 என்ற எண்ணுக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க.
News January 5, 2026
நாமக்கல்லில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாமக்கல்லில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செக்குப்பட்டி, பாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், மானத்தி, திருச்செங்கோடு நகராட்சி,சிறுமொளசி, கருவேப்பம்பட்டி, ஆண்டிபாளையம், அலங்காநத்தம், ஆத்துாராம் பாளையம், தோக்கவாடி, அம்மாபாளையம்,எருமப்பட்டி, வரகூர்,பொட்டிரெட்டிப்பட்டி, பவித்திரம்,செல்லிபாளையம்,தேவராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
News January 5, 2026
நாமக்கல் அருகே இளம்பெண் சடலமாக மீட்பு

பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தீபா, 37; விவசாயி. இவரது மகள் சர்மிளா, 18. திருச்சி தனியார் கல்லுாரியில், 1ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அருகில் இருக்கும் அத்தை வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் சர்மிளா சடலமாக மீட்கப்பட்டார். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


