News December 13, 2024
BREAKING நாமக்கல்லில் விபத்து: 2 பேர் பலி!

நாமக்கல் அருகே அமைந்துள்ள செல்லப்பம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து நாமக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த லாரியும் – நாமக்கல்லிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த பிக்கப் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பிக்கப் வேன் ஓட்டிய ஓட்டுநரும், அவருடன் இருந்த மற்றவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 12, 2025
நாமக்கல்: மாணவிகளுக்கான தடகளப் போட்டி!

நாமக்கல் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப் போட்டி வரும் நவ.14ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த தடகளப் போட்டியில் 14 மற்றும் 16 வயதுகுட்பட்ட பெண் சிறுமிகள் கலந்து கொள்ளலாம். போட்டி சம்பந்தமான விபரங்களுக்கு மாவட்ட தடகள சங்கத்தின் இணைச்செயலாளர் கார்த்தி 94448-79213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

நாமக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள்கள் அரசின் இலவச தையல் மிஷின் பெற உரிய ஆவணங்களுடன் நவ.25ந் தேதிக்குள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் முகவரியில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய, மாநில அரசு (ம) அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாத தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 40.
News November 12, 2025
நாமக்கல்: கடன் தொல்லையா இன்று இங்க போங்க!

நாமக்கல் மாவட்டம் அடுத்த அணியாபுரத்தில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


