News November 3, 2025

BREAKING: நாடு முழுவதும் ₹3,000 ஆக உயர்கிறது

image

பிஎப் உச்சவரம்பை EPFO உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎப் பிடிக்க உள்ள சம்பள உச்ச வரம்பை ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்தவும், வரும் டிசம்பர் / ஜனவரி முதல் இது அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் மணி கன்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி நடந்தால், தற்போது ₹1,800 (12%) ஆகவுள்ள அதிகபட்ச பிஎப் பிடித்தம், ₹3,000 ஆக உயரும். இதனால் பணியாளரின் பிஎப் தொகை அதிகரிக்கும்.

Similar News

News November 4, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News November 4, 2025

CSK-வில் வாஷிங்டன் சுந்தர்? இறுதியில் ட்விஸ்ட்

image

CSK-விற்கு வாஷிங்டன் சுந்தரை விட்டுக்கொடுக்க குஜராத் டைட்டன்ஸ் மறுத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் சுந்தரின் ஏலத் தொகையான ₹3.2 கோடிக்கு அவரை குஜராத் டைட்டன்ஸிடம் இருந்து CSK டிரேட் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், GT பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்ய மறுத்துள்ளாராம். இதனால், அஷ்வினின் இடத்தில் புதிய ஆல் ரவுண்டரை ஏலத்தில் வாங்க CSK திட்டமிட்டுள்ளது.

News November 4, 2025

கோவை சம்பவம்: திமுக அரசு மீது அன்புமணி காட்டம்

image

திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையே ஒரு கொடிய சான்று என அன்புமணி விமர்சித்துள்ளார். TN-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டிள்ளார். இத்தகைய குற்றங்கள் அதிகரிப்புக்கு போதை பொருட்களின் கட்டுக்கடங்காத விற்பனையே காரணம் என்றும், அவற்றை திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!