News October 14, 2025

BREAKING: நாங்குநேரி மாணவன் தாயார் மறைவு

image

நெல்லை மாவட்டம், நாங்குநேரி மாணவன் சின்னதுரையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டினர். சாதிய வன்மத்தால் நடைபெற்றதாக கூறப்பட்ட இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தாக்குதலுக்கு பின் சின்னத்துரை குடும்பம் ரெட்டியார்பட்டியில் குடியேறியது. இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று நள்ளிரவு சின்னத்துரையின் தாய் அம்பிகா உயிரிழந்தார்.

Similar News

News November 10, 2025

கொடுமுடியார் அணையில் நாளை தண்ணீர் திறப்பு

image

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு நாளை காலை 9:30 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா .சுகுமார் தலைமை தாங்குகிறார். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாயிகள் முன்னிலை வகிப்பார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 9, 2025

நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (நவ.9) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News November 9, 2025

நெல்லை: மாநகரில் இரவு காவல் அதிகாரி எண்கள்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ 9) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!