News November 17, 2025
BREAKING: நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.17) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 17, 2025
நாகை: ஆற்றில் மூழ்கிய மாணவன் பிணமாக மீட்பு

நாகை மாவட்டம், அம்பல் ஊராட்சி, பொறக்குடி குணர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் இளங்கேஸ்வரன் (17). இவர் பேரளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அரசற்றில் நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் மூழ்கி மாயமாகியுளார். இந்நிலையில் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு இளங்கேஸ்வரனை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர்.
News November 16, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாகை மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


