News November 8, 2025

BREAKING: நாகையில் கிராம நிர்வாக அலுவலர் கொலை

image

வாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன்(40). கிராம நிர்வாக அலுவலராக இருந்த இவர் முகம் மற்றும் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024-ல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த அவர், நேற்று அவ்வழக்கு விசாரணைக்காக சென்றிருந்தார். இந்நிலையில், இன்று காலை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்துடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

Similar News

News November 8, 2025

நாகை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233176>>பாகம்<<>>-2)

News November 8, 2025

நாகை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

image

1.கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2.ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3.ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4.ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
4.விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

News November 8, 2025

நாகை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்குள்ளானவர்கள் மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் நவம்பர் மாதத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!