News November 3, 2025
BREAKING: நள்ளிரவில் அதிரடி கைது

நள்ளிரவில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 35 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், 4 படகுகள், மீன்கள், வலைகளையும் பறிமுதல் செய்துள்ளதால் மீனவர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுக முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: விஜய்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைது வேதனை அளிப்பதாக கூறிய அவர், மத்திய அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசுக்கு, உரிய அழுத்தத்தை தமிழக அரசு உண்மையாக கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 3, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… அறிவிப்பு

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் ஒப்படைக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 3, 2025
தமிழகத்தை தலைகுனிய வைத்த திமுக: தமிழிசை

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என விளம்பரத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசு இன்று தலைகுனிய வைத்திருக்கிறது என்று தமிழிசை விமர்சித்துள்ளார். ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் கோவையில் விமான நிலையம் பின்புறம் கொடூரமாக நடந்தேறி இருக்கிறது என சாடிய அவர், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவும் வலியுறுத்தினார்.


