News August 18, 2025
BREAKING தூத்துக்குடியில் 17,200 பேருக்கு வேலை வாய்ப்பு

தூத்துக்குடியில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. அதன்படி அல்லிக்குளம், இராமசாமிபுரம், கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டபாறை, உமரிக்கோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் 1967 ஏக்கரில் ரூ.677 கோடியில் தொழிற்பூங்கா அமைய உள்ளது. இதனால் 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 3 மாதத்திகுள் இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 18, 2025
தூத்துக்குடிக்கு மேலும் ஒரு சிப்காட் பூங்கா

இன்று (18.8.2025) வெளியான அறிவிப்பில், சிங்கப்பூரின் ராயல் கோல்டன் ஈகிள் நிறுவனம் ரூ.4,953 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆதரவுடன் 1,967 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிப்காட்டிற்கு புதிய தொழில் பூங்கா, ரூ.667 கோடி முதலீட்டையும் 17,200 வேலைவாய்ப்புகளையும் கொண்டுவருகிறது. தென் தமிழ்நாட்டிற்கு மற்றும் ஒரு திருப்பு முனையாக அமையும் என கூறப்படுகிறது.
News August 18, 2025
தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை பதிவு

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், இணையதளங்களில் பகிரப்படும் வேலை வாய்ப்பு லீக்குகள் ஆகியவற்றுக்கு பதில் அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியான வேலை வாய்ப்பு செய்திகளில் நம்பிக்கை வைப்பதால் பண இழப்பு மற்றும் தனிப்பட்ட தகவல் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
News August 18, 2025
தூத்துக்குடி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

தூத்துக்குடி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <