News December 4, 2025
BREAKING திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தாமதம்.!

திருப்பரங்குன்றத்தில் இரவு 7மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை தீபம் ஏற்றப்படவில்லை. தீபம் ஏற்றுவதற்காக அங்கு திரண்டுள்ள இந்து முன்னணி மற்றும் பாஜகவினரை அனுமதிக்காமல், கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் தீபம் ஏற்றப்படுமா.? இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இரவு 10:30க்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 10, 2026
மதுரையில் களமிறங்கும் தவெக முக்கிய நிர்வாகி?

மதுரை மாநகர், வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லூர் பகுதியில் அமைந்துள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நேற்று தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் வருகை தந்தார். அவரை மதுரை மாநகர் மாவட்ட தலைவர் தங்கப்பாண்டியன் சால்வை அணிவித்தும் வீரவால் பரிசளித்தும் வரவேற்றனர் அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. (இவர் உசிலம்பட்டி (அ) தி.குன்றம் பகுதியில் களம் காணவுள்ளதாக தகவல்)
News March 10, 2026
இந்தியாவிலேயே மதுரை மாணவி முதலிடம்!

மதுரை ஹாா்விபட்டியைச் சோ்ந்தவா் பி.பி. லோகப்பிரியா. இவா், மதுரை அரபிந்தோ மிரா மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்புப் பயின்று, பொதுத் தோ்வில் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்றவா். இதையடுத்து, சென்னை பட்டயக் கணக்காளா் மையத்தில் பயிற்சி பெற்றாா். கடந்த ஜனவரி மாதம் இந்திய பட்டய கணக்காளா் தோ்வை எழுதினார். இதில் லோகப்பிரியா 400-க்கு 366 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பெற்றாா்.
News March 10, 2026
மதுரை: மயானத்தில் திடுக் – உடல்கள் மாறிய அதிர்ச்சி

மதுரை GH-ல் உயிரிழந்த விருதுநகரை சேர்ந்த தெய்வேந்திரன்(58) & கரூரை சேர்ந்த ஆனந்தராஜ்(66) ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு தவறுதலாக மாற்றி அனுப்பப்பட்டன. உறவினர்கள் முகத்தை பார்க்காமல் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். மயானத்தில் முகத்தை பார்த்தபோது உடல்கள் மாறியது தெரியவந்தது. பின்னர் இரு மாவட்ட போலீசாரும் நடவடிக்கை எடுத்து நள்ளிரவில் உடல்களை மீண்டும் சரியான உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


