News March 6, 2026

BREAKING திருநெல்வேலி: பஸ் மோதி இருவர் பலி

image

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே இன்று கட்டுப்பாட்டை இழந்த கேரள அரசுப் பேருந்து மோதி அருகில் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஹரிஹரசுதன்(26), நாகராஜன் (25) ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பேருந்தை பறிமுதல் செய்தனர்.

Similar News

News March 10, 2026

திருநெல்வேலி: வாளை கொண்டு போலீசாருக்கு மிரட்டல்

image

கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி(30) கீழநத்தம் பகுதியில் வாளை காட்டி பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரிடம் விசாரணை நடத்த முயன்ற போது போலீசாரையும் வாளை காட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பாளை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மாயாண்டியை நேற்று கைது செய்தனர்.

News March 10, 2026

திருநெல்வேலி: மகனை குத்தி கொன்ற தாய்

image

சிவந்திப்பட்டி கலைக் கோவில் நகரைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குடித்து விட்டு மதுபோதையில் வீட்டில் தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டியின் தாயார் மகனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிவந்திபட்டி காவல்துறையினர் மகனை கொலை செய்த தாயாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2026

நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!