News December 15, 2025
BREAKING: திமுகவில் கூண்டோடு ராஜினாமா

கோவை, விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அங்குள்ள 9-வது வட்டச் செயலாளர் மயில்சாமி தலைமையில் 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தனிப்பட்ட காரணங்களுக்காக திமுகவில் இருந்து விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொங்கு பகுதியில் திமுகவை பலப்படுத்தும் முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
Similar News
News April 3, 2026
குழந்தைகளுக்கு இதை கொடுப்பதால் ஆபத்து!

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லேட், பிரெட், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை கொடுக்குறீங்களா? இதில் அதிக உப்பு, சர்க்கரை, Trans fat, Artificial colors இருப்பதால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே சுகர் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஃப்ரூட் சாலட், காய்கறி சாண்ட்விச், ஓட்ஸ் இட்லி, ராகி லட்டு, நட்ஸ் போன்ற சத்தான ஸ்நாக்ஸை அவர்களுக்கு கொடுங்கள். SHARE
News April 3, 2026
குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்

தங்களது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் & எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக குவைத் தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் இதனை மறுத்ததுடன், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல் சவுதி, பஹ்ரைன், UAE உள்ளிட்ட நாடுகளிலும் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. குவைத்தில் தாக்கப்பட்ட ஆலை, மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகும்.
News April 3, 2026
BREAKING: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

வேலூர் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் மா.செ., ப.சண்முகத்தின் மகன் ப.ச.சுரேஷ் அண்மையில் திமுகவில் இருந்து விலகினார். மாதனூர் ஒன்றியச் சேர்மனான அவர், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஏற்பாட்டில் EPS முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். பூங்கொத்து கொடுத்து சுரேஷை வரவேற்ற EPS, வேலூர் மாவட்ட தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார்.


