News August 18, 2025
BREAKING: சென்னையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா அருகே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News August 19, 2025
வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள்

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, ஆக.28 முதல் செப்டம்பர் 12 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 06037 எழும்பூர்–வேளாங்கண்ணி ரயில் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4, 11 ஆகிய தேதிகளிலும், 06038 வேளாங்கண்ணி–தாம்பரம் ரயில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
News August 19, 2025
மூன்று மண்டலங்களில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம்

சென்னை மாநகராட்சி, முதற்கட்டமாக மண்டலங்கள் 2, 3,4-ல்,355 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளது. இந்த திட்டம் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதிகாரிகள் கூற்றுப்படி, இது தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மனிதர்களுக்கு வெறிநாய் காய்ச்சல் பரவுவதையும் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 18, 2025
சென்னையில் எங்கெல்லாம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்?

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (19.08.2025) 12 இடங்களில் நடைபெறுகிறது. திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களை சேர்ந்த வார்டுகளில் உள்ள சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பொதுத் தளங்களில் இந்த முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க.