News November 13, 2025
BREAKING: சென்னையில் நீதிபதி மீது காலணி வீச முயற்சி

ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறி, ரவுடி கருக்கா வினோத், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணி வீச முயன்றார். தி.நகர் டாஸ்மாக் வழக்கில் ஆஜர்படுத்தியபோது இந்த சம்பவம் நடந்தது. உடனே சுதாரித்த போலீசார் அவரை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News March 10, 2026
சென்னை: ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து!

நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர் (47), நித்தின்காமேஷ் (22) என்பவரின் வீட்டிற்கு வெளியே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோவின் டயரில் காற்று இறக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நித்தின்காமேஷ், சந்திரசேகரை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 9, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
சென்னை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <


