News February 4, 2026
BREAKING: சிவன்மலையில் வெட்டிக்கொலை

காங்கேயம் அடுத்த சிவன்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இங்கு அண்ணாச்சி பழ கடை வைத்திருந்த கோபியைச் சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் கோயில் அடிவார பகுதியில் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
தாராபுரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

தாராபுரம் – உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் அருகே நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தாராபுரம் GH-க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News February 6, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.06) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News February 6, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பல்லடம் நகர், மாதப்பூர், வெங்கிட்டாபுரம், மங்கலம் ரோடு, அனுப்பபட்டி, வீரபாண்டி, முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், சின்னக்கரை, இடுவம்பாளையம், அண்டிபாளையம், இடுவாய் கிழக்கு, சின்னாண்டிபாளையம், கிழக்கு, சின்னியகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


