News February 26, 2026
BREAKING சிவகங்கை: 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி

கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக 2 தரப்பினர் இடையே 2018-ல் ஏற்பட்ட மோதலில் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்தனர். இதில் 27 பேருக்கு சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது . தண்டனையை ரத்து செய்யக்கோரி 27 பேரும் மனு தாக்கல் செய்த நிலையில் இதில் ஒருவரை விடுவித்து 26 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்.
Similar News
News February 27, 2026
சிவகங்கை: கடன் வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி

ஜெயங்கொண்டநிலையை சேர்ந்த அன்னலெட்சுமியிடம் வீடு கட்ட கடன் வாங்கி தருவதாக கூறி அவரது நில ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து தேசிய வங்கி கிளையில் ரூ.3.40 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தேசிய வங்கி மேலாளர் உட்பட சுகபதி, கார்த்திக், மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News February 27, 2026
சிவகங்கை: கடன் வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி

ஜெயங்கொண்டநிலையை சேர்ந்த அன்னலெட்சுமியிடம் வீடு கட்ட கடன் வாங்கி தருவதாக கூறி அவரது நில ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து தேசிய வங்கி கிளையில் ரூ.3.40 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தேசிய வங்கி மேலாளர் உட்பட சுகபதி, கார்த்திக், மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News February 26, 2026
பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாத டிஎஸ்பி

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கு தொடர்பாக டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகாவில்லை. இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் அவர் ஆஜராகவில்லை.


