News February 4, 2026
BREAKING: சிவகங்கை அஜித்குமார் கொலை மனம் பதறுகிறது : நீதிபதி

கடந்த வருடம் 2025 ஜீன் மாதம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தது. அஜித் குமார் மீது நிகிதா அளித்த புகார் உண்மை இல்லை. ஒன்றுமில்லாத வழக்கில் ஒருவர் அடித்து கொலை. காவல்துறையின் செயலை பார்த்தால் மனது பதறுகிறது. என நீதிபதி ஸ்ரீமதி வேதனை தெரிவித்துள்ளார்
Similar News
News February 12, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (11..02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News February 11, 2026
சிவகங்கை: உதவித்தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
சிவகங்கை: பொதுவிநியோகத் திட்ட சிறப்பு முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வருகின்ற 14.02.2026 அன்று சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு / மாற்றம், புகார் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.


