News July 6, 2025
BREAKING சாத்தூர் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து

கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட விபத்தில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்அனர். இந்நிலையில் ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News July 6, 2025
பட்டாசு வெடி விபத்து ஒரு சாபக்கேடு – பிரேமலதா விஜயகாந்த்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் ஆலையின் உரிமம் ரத்து என்பது கண் துடைப்பாக இல்லாமல் இனி வரும் காலங்களில் விபத்து ஏற்படாத வகையில் சட்டம், அரசாணை பிறப்பிக்க வேண்டும். பட்டாசு வெடி விபத்து விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு சாபக்கேடாக உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
News July 6, 2025
BREAKING சாத்தூர் வெடி விபத்தில் போர்மேன் கைது

சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான கீழதாயில்பட்டியில் செயல்படும் ஷிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போர்மேன் லோகநாதனை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 6, 2025
BREAKING சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் செயல்பட்டு ஷிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் சற்றுமுன் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 10 கிமீ தொலைவிற்கு தொலைவிற்கு அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.