News September 21, 2024
BREAKING கோவை: ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

கோவை கொடிசியா மைதானத்தில் பதுங்கியிருந்த ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆல்வின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமைக் காவலர் ராஜ்குமார் மீது ஆல்வின் கத்தியால் குத்தியதால், தற்காப்புக்காக காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஆல்வினின் 2 கால் முட்டிகளிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
Similar News
News August 23, 2025
மறந்துடாதீங்க – இன்று வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ( ஆக.23) காலை 8 மணியளவில் கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
News August 23, 2025
கோவையில் புது வித மோசடி! உஷார் மக்களே

கோவையில், ஒரே பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என அரசு கல்வித்துறை அதிகாரிகள் போல் பேசி, வீடியோ கால் மூலம் QR ஸ்கேன் செய்ய வற்புறுத்தி பல லட்சம் ரூபாய் ஆன்லைனில் பறித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெற்றோர் சைபர் கிரைமில் புகார் அளித்து உள்ளனர்.இதனை மற்றவர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
News August 22, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.22) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.