News April 25, 2025

BREAKING: கோவையில் 3 மாணவர்கள் உயிரிழப்பு 

image

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை பகுதிக்கு சுற்றுலா சென்ற சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியை சேர்ந்த பிசியோதெரபி மாணவர்கள் தருண், ராவத், ஆண்டோஜெனிப் ஆகியோர் ஆழியார் ஆற்றில்  நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடலை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஆழியார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 25, 2025

இலவச பஸ் பாஸ் பெற அழைப்பு

image

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள பார்வைத்திறன், காது குறைபாடு, உடல் இயக்க குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது. இதை பெற, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

News April 25, 2025

கோவைக்கு வரும் விஜய்! 

image

தவெக பூத் கமிட்டி மாநாடு நாளை ஏப்.26, நாளை மறுநாள் ஏப்.27 ஆகிய தேதிகளில் கோவை, குரும்பபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து நாளை காலை 08:30 மணியளவில், கோவை விமானம் நிலையத்திற்கு வருகை தர உள்ளார். எனவே, அவரை வரவேற்பதற்காக, கோவை மாவட்ட தவெக கட்சி செயலாளர்கள் சார்பாக, நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News April 25, 2025

இலவச பயிற்சி வகுப்புகள்

image

கோவையில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.26ஆம் தேதி முதல் துடியலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் நடைபெறுகின்றன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க மே.3ஆம் தேதி கடைசி ஆகும். போலீஸ் ஆக விரும்பும் நபர்கள் இப்பயற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

error: Content is protected !!