News February 2, 2026
BREAKING கோவையில் மூன்று பேர் தற்கொலை!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ் காலனி தம்பு நகரை சேர்ந்த தம்பதி கமலேஷ் – இலக்கியா. இவர்களது மகள் யச்சிதா ஏஞ்சல்(10). கமலேஷ் மின்வாரிய அதிகாரி. மூவரும் நேற்றிரவு உறவினர்களுக்கு வீடியோ மூலம் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் அனுப்பியுள்ளனர். விரைந்து சென்ற உறவினர்கள் போலீசார் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது, மூவரும் தற்கொலை செய்து தெரிந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 15, 2026
கோவை: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 15, 2026
கோவை வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது. அங்குள்ள ஆதியோகி சிலை முன் நடைபெறும் இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 7,000 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News February 15, 2026
கோவை: கலைஞர் கனவு இல்லம் பெறுவது எப்படி?

1. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம்).
3. ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ.3.50 லட்சம் அரசு வழங்குகிறது.
4. விண்ணப்பிக்க, உங்கள் பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO)அணுகி அனுகவும்.
5. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க


