News August 5, 2024
BREAKING கோவைக்கு புதிய மேயர் இவர்தான்!

மேயர் பதவியை கல்பனா ராஜினாமா செய்த நிலையில், நாளை கோவை மாநகர மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி (29வது வார்டு கவுன்சிலர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி ரங்கநாயகி மேயராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது.
Similar News
News February 8, 2026
பொள்ளாச்சியில் பயங்கர விபத்து: திமுக பிரமுகர் பலி

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர், ஆனைமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். அவர், பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஜமீன் ஊத்துக்குளி அருகே, எதிரே வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
News February 8, 2026
ஜி.டி.நாயுடு பாலத்தில் ஓடவும், ஒளியவும் முடியாது

கோவை- அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ தூரத்திற்கு கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. சுமார் ரூ.1,671 கோடியில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சுமார் ரூ.3 கோடியில் ஏ.ஐ.தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
News February 7, 2026
கோயம்புத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்.

(07.02.2026) கோயம்புத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .


