News November 22, 2025

BREAKING: கைதாகிறாரா சீமான்?

image

நெல்லையில் நாதகவின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், தடையை மீறி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சீமான் தங்கியுள்ள ஹோட்டல் முன் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு புறப்பட்டால், சீமானை கைது செய்ய போலீசார் ரெடியாக இருக்கின்றனர். ஏற்கெனவே, நள்ளிரவில் இருந்து நாதகவினர் கைது செய்யப்படுகின்றனர்.

Similar News

News January 23, 2026

சேலை மடிப்பில் இதயங்களை நொறுக்கும் கயாது ❤️❤️

image

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான கயாது லோஹர் அடுத்ததாக ‘இதயம் முரளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இளைஞர் மத்தியில் கனவு கன்னியாக வலம் வரும் அவரின் போட்டோஸுக்கு எப்போதுமே SM-ல் ஹார்ட்டின் பறக்கும். அப்படி சேலையில், மென்மையான சிரிப்புடன் அவர் பகிர்ந்துள்ள ரீசண்ட் கிளிக்ஸ் மனதை கொள்ளை கொள்கிறது. உங்கள் நெஞ்சத்தை பறிகொடுக்க மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்யுங்கள்.

News January 23, 2026

தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள்.. புதிய தகவல்

image

தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலம், தி.மலையில் இருந்து செய்யாறு, கோவையில் இருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து ஆத்தூர், தஞ்சையில் இருந்து கும்பகோணம் ஆகிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு குடியரசு தினத்தன்று (ஜன.26) வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 23, 2026

சட்டப்பேரவையில் உதயகுமார் Vs ரகுபதி வார்த்தை போர்

image

சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து EX அமைச்சர் உதயகுமார் மற்றும் அமைச்சர் ரகுபதி இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், நிரந்தர டிஜிபி இல்லாததால் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் உதயகுமார் குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, இந்தியாவிலேயே குற்ற சம்பவம் குறைவாக நடப்பது தமிழகத்தில் தான் என விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!