News August 5, 2025
BREAKING: கவின் கொலை.. யாரும் தப்பிக்க கூடாது!

அறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை நெல்லை நீதிபதி தலைமையில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் இன்று, கவின் கொலை வழக்கில் யாரும் தப்பிக்க கூடாது. முறையாக விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 6, 2025
தூத்துக்குடி இனி நம்ம கையில.!

தூத்துக்குடி மக்களே.. நம்ம மாவட்டத்தோட அத்தனை தகவலும் ஒரு புத்தகமா வெளியாகி இருக்கு. அதுல, மக்கள் தொகை, வானிலை, விவசாயம், பேங்க், கூட்டுறவு, சிவில், மின்சாரம், கல்வி, மீனவர் நலம், மருத்துவம், தொழிற்சாலை, பதிவுத் துறை, ஹோட்டல், போக்குவரத்து, சுற்றுலா என மாவட்டத்துல இருக்குற அத்தனை தகவலும் ஒரே புத்தகமா வெளியாகி இருக்கு.. இனி நம்ம மாவட்டம் விரல் நுனியில்.. இத <
News August 6, 2025
தொழிற்சாலை விபரம் இணையதளத்தில் பதிய உத்தரவு

நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஏற்கனவே பதிவு பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் புதியதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள் புதிதாக மேம்படுத்தப்பட்ட dish.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தொழிற்சாலை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.