News October 22, 2025
BREAKING: ஏற்காடு செல்ல தடை!

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, சேலம்-ஏற்காடு மலை சாலை மற்றும் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 22.10.2025 மாலை 7 மணி முதல் 24.10.2025 வரை போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஏற்காடு பயணத்தை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 5, 2026
சேலத்தில் மகளை கொன்ற கொடூர தந்தை

சேலத்தில் தனியார் ஹோமியோபதி கல்லூரியில் பயின்று வந்தவர் வர்ஷினி. இவர் கடந்த ஜன.7ம் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த மரணத்தில் வர்ஷினியின் தந்தை வரதராஜன் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பவம் நடந்ததிலிருந்து வரதராஜன் தலைமறைவாக இருந்ததால், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
News February 5, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்,
சேலம் மாவட்டத்தில் பிப்.5-ல் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
News February 5, 2026
சேலம் வனக் கோட்டத்தில் 24 அரிய வகை பறவைகள்

சேலம் வனக்கோட்டம் வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், டேனிஷ் பேட்டை, சேர்வராயன் மலை உள்ளிட்ட வனப் பகுதியில் முதன்முறையாக இரைக்கொல்லிப் பறவைகள் கணக்கெடுப்பு இரு தினங்கள் நடைபெற்றது. வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் இணைந்து நடத்திய இந்த கணக்கெடுப்பில், ராஜாளி, வல்லூறு, பருந்து, ஆந்தைகள் உள்ளிட்ட 24 அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் ஷஷாங் ரவி காசியப் தெரிவித்துள்ளார்.


