News September 30, 2025
BREAKING: எண்ணூரில் கோர விபத்து- 4 பேர் பலி

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கோரவிபத்து ஏற்பட்டு 4 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டுமான பணியின்போது கம்பிகள் சரிந்து அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Similar News
News March 12, 2026
ராயபுரம்: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சென்னை, ராயபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 7ஆம் தேதி பள்ளி முடிந்து, வீட்டுக்கு நடந்து சென்றார். ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள கடையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில், பி.வி கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் (54) என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 11, 2026
சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு – தனியார் கல்லூரிக்கு விடுமுறை!

சென்னையில் கடந்த இரு தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மதுரவாயலில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வருகிற 25 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது.
News March 11, 2026
சென்னை: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

சென்னை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.


