News November 21, 2024
BREAKING: ஊசி போட்ட பெண் உயிரிழப்பு

திண்டுக்கல், கொடைக்கானலில் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியதர்ஷினி என்பவருக்கு 20 நாளுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 16, 2025
BREAKING திண்டுக்கல்: அமைச்சர் பெரியசாமி வீட்டில் ED ரெய்டு

திண்டுக்கல் கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, கோவிந்தாபுரம், அசோக்நகர், வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீடு, சீலப்பாடியில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வீடு ஆகிய 3 இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய மத்திய CRPF போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News August 16, 2025
திண்டுக்கல்: ரூ.76,380 சம்பளம்: கூட்டுறவு சங்கத்தில் வேலை !

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 15, 2025
திண்டுக்கல்: இளைஞர்களுக்கு வீடியோ எடிட்டிங் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு “வீடியோகிராபி மற்றும் வீடியோ எடிட்டிங்” சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://iei.tahdco.com/vve_reg.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.