News August 4, 2024

BREAKING ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேர் கைது

image

மதுரை சுந்தர்ராஜபுரத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களிடமிருந்து 3 வாள்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் அவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 5, 2025

மேலூர் பொதுப்பணித்துறை ஊழியர் திடீர் மரணம்

image

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் முனியாண்டி (46). இவர் மேலூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து டூவீலரில் சென்ற போது, சந்தைப்பேட்டை அருகில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2025

மதுரை: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை அருகே மேல பனங்­காடியை சேர்ந்­தவர்­ கார்த்திக்(34). கொத்­த­னார் வேலை பார்த்து வந்­தார். மது ப­ழக்­கத்திற்கு அடி­மை­யா­ன இவர் தனது சம்­பள பணத்தை வீட்டிற்கு கொடுக்­கா­மல் குடித்து வந்­தார். இதனால் மனைவியுடன் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது. இதில் மனமு­டைந்த கார்த்­திக் இன்று தூக்குப்­ போட்டு தற்­கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடல்புதூர் போலீ­சார் விசா­ரிக்கின்­ற­னர்.

News November 5, 2025

மதுரையில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா.?

image

மதுரை மக்களே, நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

error: Content is protected !!