News August 8, 2024
BREAKING: பல்லடத்தில் வாலிபர் வெட்டி படுகொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட கரையான்புதூர் பகுதியில் இன்று காலை மர்ம நபர்களால் துரத்திச் செல்லப்பட்ட வாலிபர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற டிஎஸ்பி விஜிகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உயிரிழந்தவர் யார்? கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
உடுமலையில் இறைச்சி பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி!

உடுமலை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பத் துறையில் இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை பதப்படுத்தும் உதவியாளர் குறித்த கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட www.tnskill.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 28, 2025
திருப்பூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தியில்; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக்.31ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு!

டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வரும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் அவ்வப்போது இணைக்கப்படுகிறது. அவ்வகையில், கோவை – ராமேஸ்வரம் ரயிலில் (எண்: 16618), நவ.04 முதல் ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்பட உள்ளதாக, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இது கோவையிலிருந்து, திருப்பூர், ஈரோடு, திருச்சி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.


