News April 28, 2025

BREAKING நெல்லையில் அதிக சொத்து சேர்த்த பொறியாளர் மீது வழக்கு

image

நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின். இவர் வருமானத்துக்கு அதிகமாக 3.59 கோடி சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லை சாந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஏப்.28) தீவிர சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News December 3, 2025

நெல்லை: 2.33 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

image

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 2.33 லட்சத்து 464 வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கணக்கீட்டின்படி தெரியவந்துள்ளது. இறந்தவர்கள், கண்டுபிடிக்க இயலாதவர்கள், இரட்டை பதிவு ஆகிய பிரிவுகளில் இவர்கள் அடங்குவர். கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

News December 3, 2025

நெல்லை: 5 உர விற்பனை நிலையங்களுக்கு தடை

image

வேளாண்மை அதிகாரிகள் களக்காடு வட்டாரத்தில் உர விற்பனை நிலையங்களில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உர கட்டுப்பாட்டு ஆணை விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். பதிவேடு சரியாக பராமரிப்புக்காமல் இருத்தல், உரிய பாரம் இணைக்காமல் உரம் விற்பனை செய்தல் போன்ற விதி மீறல்கள் கண்டறியப்பட்டன என இணை இயக்குனர் பூவண்ணன் தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

11.82 லட்சம் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று வரை, 14,17,655 வாக்காளர்களுக்கு (சுமார் 99.96 சதவீதம்) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. 11,82,927 கணக்கீட்டு படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விண்ணப்ப படிவங்கள் வழங்காத வாக்காளர்கள் விரைவில் வழங்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.

error: Content is protected !!