News April 28, 2025

BREAKING நெல்லையில் அதிக சொத்து சேர்த்த பொறியாளர் மீது வழக்கு

image

நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின். இவர் வருமானத்துக்கு அதிகமாக 3.59 கோடி சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லை சாந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஏப்.28) தீவிர சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News November 28, 2025

JUST IN நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை

image

நெல்லை, பாப்பாக்குடி அருகே கலிதீர்த்தான்பட்டியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் (29) தனது வயலில் உள்ள பம்பு செட் அறையில் தூங்கியபோது, மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தனர். அதிகாலையில் தாயார் சென்று பார்த்தபோது முகம் சிதைந்த நிலையில் உடல் கிடந்தது. பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News November 28, 2025

நெல்லை: இலவச வீட்டு மனை வேண்டுமா?…

image

நெல்லை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News November 28, 2025

நெல்லை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கன மழை பெய்கிறது. இந்நிலையில் நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. SHARE IT.

error: Content is protected !!