News November 3, 2025

BREAKING: நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது‌

image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 35 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நாகை நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள் என 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Similar News

News December 11, 2025

நாகை: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

image

நாகை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக் செய்து<<>>, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

CM ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நாகூர் தர்கா கலிபா

image

நகை மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு, தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, நாகூர் தர்கா கலீஃபாவும் முதல் அறங்காவலுருமான Dr. கலிபா மஸ்தான் சாஹிப் காதரி நேரில் சந்தித்து நேற்று
(டிச.10) பிரசாதம் வழங்கினார்.

News December 11, 2025

நாகை: கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது

image

ஆக்கூா் அருகே அப்புராசபுத்தூா் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஐம்பொன் சிலைகள் மற்றும் பித்தளை பொருள்களை திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். இக்கோயிலில் திங்கள்கிழமை இரவு கதவு உடைக்கப்பட்டு ஐம்பொன் அம்மன் சிலை மற்றும் பித்தளை பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் (20), முகமது அலி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!