News April 29, 2025

BREAKING: குடிநீர் தொட்டியில் மனித மலம்!

image

தி.மலை மாவட்டம் பாணம்பட்டு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலத்தை பூசிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தண்ணீர் பிடிக்க வந்த கிராம மக்கள் குடிநீர் தொட்டியில் மலம் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் மலத்தை பூசியது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News July 11, 2025

தி.மலை- ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்

image

திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு நேற்று (ஜூலை 10) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இது ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

News July 11, 2025

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

image

நேற்று ஜூலை-10ந் தேதி முதல் செப்டம்பர் மாத இறுதிவரை மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு பணி நடைபெறும். இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களது முழுவிபரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்குவதற்கான பணி தொடங்கவுள்ளது. இதில் சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் (CSPs) முன்களப்பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

திருவண்ணாமலை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகளின் விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10/07/2025 இரவு 10 மணி முதல் 11/07/2025 காலை 06 மணி வரை இரவு ரோந்துக்கு தாலுக்கா வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உங்கள் தாலுக்கா அதிகாரி அழைக்கலாம் மற்றும் 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!