News August 4, 2024
BREAKING ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேர் கைது

மதுரை சுந்தர்ராஜபுரத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களிடமிருந்து 3 வாள்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் அவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
மதுரை: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே மேல பனங்காடியை சேர்ந்தவர் கார்த்திக்(34). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தனது சம்பள பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் குடித்து வந்தார். இதனால் மனைவியுடன் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கார்த்திக் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 5, 2025
மதுரையில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா.?

மதுரை மக்களே, நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
News November 5, 2025
மதுரை: சொல்பேச்சு கேட்காத மகன்கள்; தாய் விபரீத முடிவு

மதுரை ஆனையூர் வாகைகுளத்தை சேர்ந்தவர் விமலா (34). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இவரது இரண்டு மகன்களும் இவரது பேச்சு மற்றும் அறிவுரைகளை கேட்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


