News September 29, 2025
BREAKING:கிருஷ்ணகிரி இரட்டை கொலை… 3 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூரில் கடந்த 26ஆம் தேதி நிகழ்ந்த தாய், மகள் இரட்டை கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட எல்லம்மாளிடம் ரூ.10,000 கடன் வாங்கி ரூ.3,000 செலுத்திய நிலையில், மீதி பணத்தை கேட்டதால் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக நவீன்குமார், சத்தியரசு மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டுள்ளனர்.
Similar News
News October 15, 2025
கிருஷ்ணகிரி: கல்லூரியில் நேரடி சேர்க்கை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ஓராண்டு சான்றிதழ் படிப்புகளுக்கு Left over Seats பூர்த்தி செய்ய, நேரடி சேர்க்கை (Walk-in interview) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் பிரிவு தேர்ச்சி, குறைந்தபட்ச வயது 17. கல்வி கட்டணம் ரூ.1450, விண்ணப்பக் கட்டணம் இல்லை. நேரடியாக கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
கிருஷ்ணகிரி: +2 போதும், நல்ல வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 15, 2025
கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட 2-ஆவது தளத்தில் உள்ள அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் அக்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி செய்துகொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஷேர் செய்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்துங்க.