News November 29, 2024
BREAK UP செய்வது குற்றமே அல்ல: சுப்ரீம் கோர்ட்

8 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால், கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அந்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேக் அப் செய்வது துன்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், அது தற்கொலைக்கு தூண்டக்கூடிய குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
Similar News
News April 27, 2025
திமுக துணை பொதுச் செயலாளராகும் உதயநிதி?

உதயநிதி ஸ்டாலின், திமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு, அக்கட்சித் தலைமை அடுத்து ஒரு பெரிய பதவியை வழங்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. பொதுச் செயலாளராக துரைமுருகன் இருப்பதால், அவருக்கு அடுத்த பதவியில் உதயநிதியை நியமிப்பது குறித்த அறிவிப்பை விரைவில் திமுக வெளியிடும் எனச் சொல்லப்படுகிறது.
News April 27, 2025
மருத்துவ கழிவுகள் விவகாரம்.. அரசு முக்கிய முடிவு

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால், விசாரணையின்றி நேரடி சிறை தண்டனை வழங்கும் வகையில், சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மசோதாவை அறிமுகம் செய்தார். வரும் 29-ம் தேதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
News April 27, 2025
வீட்டில் சாமி கும்பிடும் போது இந்த 3 விஷயங்கள் முக்கியம்

வீட்டில் கடவுளை தூய மனதுடன் வழிபட முடியவில்லை, பூஜை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு கர்ம வினையே தான் காரணம் எனப்படுகிறது. இதிலிருந்து விடுபட இந்த 3 விஷயங்களை பின்பற்ற வேண்டும். இதை ‘ திரிகரண சுத்தி’ என்கிறார்கள். அதாவது வழிபடும் போது, மனதில் நல்ல எண்ணங்களை நிலைநிறுத்தி, கைகளால் பூக்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை உச்சரித்து கடவுளை பூஜிக்க வேண்டும். SHARE IT.