News February 19, 2025
உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்: CM ஸ்டாலின்

TN உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இது குறித்து Xஇல் பதிவிட்டுள்ள CM ஸ்டாலின், உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்! என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் #SaveTNRights என்ற ஹேஷ் டேக்கையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News February 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
News February 21, 2025
’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ரிவ்யூ

தனுஷ் இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகவிருக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி இன்று பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதனைப் பார்த்தவர்கள், முழுக்க முழுக்க பாசிட்டிவான ரிவ்யூக்களை கொடுத்து வருகின்றனர். மிகவும் ஜாலியாகவும் யூத்ஃபுல்லாகவும் படம் நகர்வதாக கூறியிருக்கும் பத்திரிகையாளர்கள், இதற்கு 3.5/5 ரேட்டிங் கொடுத்திருக்கின்றனர்.
News February 21, 2025
மோசடி வழக்கு: மகாராஷ்டிரா அமைச்சருக்கு 2 ஆண்டு ஜெயில்

மோசடி வழக்கில் மகாராஷ்ட்ரா என்சிபி அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாசிக் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசு இடஒதுக்கீட்டில் வீடுகள் பெற போலி சான்றிதழ்களை அளித்ததாக அவர் மீது 1995இல் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் மாணிக்ராவ் கோகடே, சகோதரர் சுனில் காேகடேக்கு 2 ஆண்டு சிறை, ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது.