News March 5, 2025
தேர்வுக்கு பயந்து 2,000 கி.மீ பயணித்த சிறுவன்

பிளஸ் 1 படிக்கும் சிறுவன் ஒருவன், தேர்வுக்கு பயந்து, 2,000 கி.மீ பயணித்த திடுக் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. கடந்த பிப்.21ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு ரயிலில் சென்றுள்ளான். பின்னர், அங்கிருந்து கிருஷ்ணகிரி வந்து, அங்கு, கட்டுமான வேலை செய்துள்ளான். இதை அறிந்த போலீசார் அவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பயப்படலாம் அதுக்குனு இப்படியா.
Similar News
News March 5, 2025
தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தானில் ராணுவ வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பன்னு பகுதியில் நேற்று மாலை நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் இருக்கும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது.
News March 5, 2025
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்

2026 பேரவைத் தேர்தலுக்காகத் தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் கெளஷிக் பாண்டியன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் களமிறங்குவார் என அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், முதல் கட்சியாக வேட்பாளரை அறிவித்து தமிழக அரசியல் களத்தை நாதக சூடுபிடிக்க வைத்துள்ளது.
News March 5, 2025
பிளஸ் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள், பெற்றோர் தங்கள் புகார்கள், சந்தேகங்களை அறிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். 9498383075, 9498383075 ஆகிய எண்களில் அழைக்கலாம். ALL THE BEST.