News February 28, 2025
பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி?

சென்னை, திருமுல்லைவாயலில் பரோட்டா சாப்பிட்ட சிறுவன் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் சுதர்சன் கடந்த திங்களன்று காலையில் பரோட்டா சாப்பிட்டதாகவும், அதிலிருந்து அவனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து நேற்று சிறுவன் உயிரிழந்தான். இந்த மரணத்துக்கு பரோட்டா சாப்பிட்டதா (அ) வேறு காரணமா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 1, 2025
சின்னப்பசங்க அப்படித்தான் பேசுவார்கள்: முத்தரசன்

பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் பாயாசம் பற்றி பேசுவதாக தவெக தலைவர் விஜயை CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அரசியலில் ஆர்வம் காட்டுகிறவர்கள் ஹிட்லரை படித்து, பாசிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். சின்னப் பிள்ளைகள் அப்படிதான் பேசுவார்கள், அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 193
▶குறள்:
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
▶பொருள்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
News March 1, 2025
தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு: ஜோதிமணி

சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும், வக்கிரத்துடன் பேசுவது அல்ல என்றும், பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை பொருட்டாக மதிக்காத சீமான் போன்றவர்களுக்கு சட்டம் தனது கடமையை செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.