News December 30, 2024
எல்லைப் பாதுகாப்புப் படை வேலை.. இன்றே கடைசி

BSFஇல் 275 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டு இருந்தன. இதற்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்புத் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு இருந்தது. விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது. வயது வரம்பாக 18-23 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும். வேலையில் சேர விரும்புவோர் www.rcttd.bsf.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 13, 2025
114 ரஃபேல் விமானங்களை வாங்க வலியுறுத்தல்

114 ‘Made in India’ ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்திடம் IAF வலியுறுத்தியுள்ளது. ₹2 லட்சம் கோடி மதிப்பீட்டில் இந்த வர்த்தகம் நடைபெறும் என கருதப்படுகிறது. ஃபிரெஞ்ச் நிறுவனமான டசால்ட் மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய போர் விமானங்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களில் 60% பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.
News September 13, 2025
உங்கள் மூளையை மெல்ல கொல்லும் 6 பழக்கங்கள்

உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உறுப்பை சில மோசமான பழக்கவழக்கங்களால் நாம் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மறதி, Brain Fog, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உங்களது மூளையை கொல்லும் 6 மோசமான பழக்கங்கள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த தவறுகளை செய்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News September 13, 2025
வெளிநாட்டு படங்கள் பார்த்தால் மரண தண்டனை

வடகொரியாவில் வெளிநாட்டு படங்களை பார்ப்பவர்களுக்கும், அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் நபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. உலகில் எங்கும் இல்லாத வகையில், வடகொரியாவில் மக்கள் அதீதமாக கண்காணிக்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இருந்து தப்பிய 300 பேர் கூறியதின் அடிப்படையில் ஐநா இதை கூறியுள்ளது.