News December 4, 2024
பத்திரப்பதிவு: நாளை கூடுதல் டோக்கன்

நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரம் பதிவு செய்யும் வகையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய பத்திரப்பதிவு துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடத்தில் 150 (முன்பு 100), 2 சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடங்களில் 300 டோக்கன் (முன்பு 200) ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 4 தட்கல் டோக்கன் ஒதுக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News November 24, 2025
உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம்: பிரேமலதா

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக முத்திரை பதிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான <<18372669>>கூட்டணி<<>> முறிந்து போனதாக கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்திருந்த அவர், உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். தேமுதிக இடம்பெறும் கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 24, 2025
இது நியாயமா கவுதம் கம்பீர்?

எவ்வித காரணமும் இன்றி வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் வரிசையை கம்பீர் மாற்றுவதாக ரசிகர்கள் சாடுகின்றனர். கடந்த 7 இன்னிங்ஸில் அவர் வெவ்வேறு வரிசையில் களமிறங்கியுள்ளார். கொல்கத்தா டெஸ்ட்டில் ஒன் டவுன் வீரராக இறங்கி சரியான டெக்னிக்குடன் சுழலை எதிர்கொண்ட சுந்தர், கவுஹாத்தி டெஸ்ட்டில் 8-வது வரிசையில் இறங்கினார். அடிக்கடி chop & change செய்வது வீரர்கள் மனதில் இன்செக்யூரிட்டியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
News November 24, 2025
பொடுகு தொல்லை இருக்கா? இந்த தப்பை பண்ணாதீங்க

இரவில் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு, அதை அப்படியே விடும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? இனி அப்படி செய்யவேண்டாம். இதனால், பொடுகு தொல்லை மேலும் தீவிரமாகி, முடி அதிகமாக கொட்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு பதிலாக, தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதுவே போதுமானது. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணலாமே!


