News December 4, 2024
பத்திரப்பதிவு: நாளை கூடுதல் டோக்கன்

நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரம் பதிவு செய்யும் வகையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய பத்திரப்பதிவு துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடத்தில் 150 (முன்பு 100), 2 சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடங்களில் 300 டோக்கன் (முன்பு 200) ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 4 தட்கல் டோக்கன் ஒதுக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News April 28, 2025
ஒரே நாளில் வெள்ளி விலை ₹1000 குறைவு

நீண்ட நாட்கள் கழித்து தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. குறிப்பாக, தங்கம் விலை எகிறியதால், பலர் வெள்ளியை நாடினர். குறிப்பாக இன்று ஒரு நாளில் மட்டும் வெள்ளி விலை (கிலோ) ₹1000 குறைந்தது. வரும் நாட்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News April 28, 2025
எந்த நேரத்திலும் இந்தியா தாக்கலாம்: பாக்., அமைச்சர்

இந்தியா எந்த நேரத்திலும் தங்கள் நாட்டை தாக்கலாம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அச்சம் தெரிவித்துள்ளார். ஆகவே, இதை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாகவும், நாடு முழுவதும் உஷார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேவையெனில் அணு ஆயுதங்களும் பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின் இருநாடுகள் இடையே உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
News April 28, 2025
திமுகவில் அடுத்து நடக்கப்போகும் அதிரடி மாற்றம்

மே 3-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் சரியாக வேலை செய்யாத மற்றும் கட்சி பொறுப்பாளர்களிடம் இணக்கமாக செல்லாத மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்படலாம் என்றும் உதயநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.