News July 10, 2025
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Similar News
News July 10, 2025
‘றெக்க மட்டும் இருந்தா தேவதை மச்சான்’

பிரியா பவானி ஷங்கர் மாடர்ன் டிரஸ்ஸில் மயக்கும் போட்டோஷூட் நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது. ‘பேசும் பார்வை கண்களின் நயம், பிரியாவின் நிழலில் பொழியும் நயம்’ என கவிதை தான் எழுத தோன்றுகிறது. ‘இவ்வளோ அழகா இருக்குறது ரொம்ப தப்பு மேடம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அவர் ‘டிமான்டி காலனி 3’ படத்தில் நடித்து வருகிறார். உங்களுக்கு பிடிச்ச பிரியா பவானி ஷங்கர் படம் எது?
News July 10, 2025
ஸ்மார்ட்போன்கள் விலை கணிசமாக குறையும்..!

செல்போன்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கவுண்டர் பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் பல பிராண்டுகளின் செல்போன்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், கையிருப்பைக் குறைக்க பெரும் தள்ளுபடியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டிகை நாள்களில் OnePlus, Xiaomi, iQOO, Realme, Oppo, Nothing பிராண்டுகள் தள்ளுபடியை வழங்க வாய்ப்புள்ளதாம்.
News July 10, 2025
அன்புமணி நீக்கம்? தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

பாமகவில் நீடித்துவரும் அப்பா – மகன் மோதலால், தலைவர் பதவி மட்டுமின்றி, கட்சியில் இருந்தே அன்புமணியை நீக்க ராமதாஸ் ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாமக தலைவராக அன்புமணியின் பதவி மே 28 உடன் முடிவடைந்ததால், 29-ல் ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றார். இதனை முன்வைத்து, பாமக முழுவதையும் ராமதாஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.