News April 25, 2025
இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு, முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கிய நிலையில், இந்த மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் வீடு முழுவதும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.
Similar News
News November 20, 2025
கட்சி தாவினார்: அதிமுகவில் இணைந்த பாமகவினர்!

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன், சின்ன மூக்கனூர் ஊராட்சி பாமக வார்டு உறுப்பினராக உள்ள நிலையில், தற்போது, வீரப்பன் தனது ஆதரவாளர்களுடன் பாமகவில் இருந்து விலகி முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் இன்று (நவ.19) அதிமுகவில் இணைந்தார்.
News November 20, 2025
கனமழை: நாளை இங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதலே மழை பெய்யக்கூடும் என்பதால், நாளை பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்.
News November 19, 2025
12 பேரை திருமணம் செய்த பெண் (PHOTO)

போலீஸ் அதிகாரி உள்பட 12 பேரை திருமணம் செய்து ₹8 கோடி சுருட்டிய பெண் போலீசில் சிக்கியுள்ளார். உ.பி., கான்பூரை சேர்ந்த திவ்யான்ஷி செளத்ரி(30) ஆசிரியை என்ற போர்வையில் உலா வந்துள்ளார். Bank மேனேஜர்கள் 3 பேரை திருமணம் செய்துவிட்டு சிக்கியபோது, சில போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து எஸ்கேப் ஆகியுள்ளார். முன்பின் தெரியாத இதுபோன்ற பெண்களிடம் ஆண்கள் உஷாராக இருப்பது நல்லது என போலீசார் எச்சரிக்கின்றனர். உஷார்..!


