News April 25, 2025
இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு, முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கிய நிலையில், இந்த மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் வீடு முழுவதும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.
Similar News
News November 17, 2025
சற்றுமுன் சந்திப்பு: அதிமுக கூட்டணியில் தேமுதிக?

மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சந்தித்து பேசி வருகிறார். அவருடன் தென் மாவட்ட அதிமுக முக்கியத் தலைவர்களும் இருக்கின்றனர். ஜனவரி மாதம் கடலூர் மாநாட்டில் அல்லது அதற்கு முன்னதாக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று பிரேமலதா கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News November 17, 2025
2 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. Alert

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. அதேபோல், குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 17, 2025
தெலங்கானா சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

தெலங்கானா சபாநாயகர் பிரசாத் குமாருக்கு SC கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2023 தேர்தலில், காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்த போது, BRS கட்சியின் 10 MLA-க்கள் அக்கட்சிக்கு தாவினர். அவர்களை தகுதியிழப்பு செய்யக் கோரும் BRS-ன் மனு மீது, SC ஆணையிட்டும் சபாநாயகர் செயல்படவில்லை. இதையடுத்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்காவிட்டால், புத்தாண்டில் எங்கு இருப்பது என்பது உங்கள் கையில் என சபாநாயகரை SC எச்சரித்துள்ளது.


