News October 3, 2025
CM வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

த்ரிஷா வீட்டை தொடர்ந்து, CM ஸ்டாலின் இல்லம் & கவர்னர் மாளிகைக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரிய வந்துள்ளது. இருப்பினும், சென்னை ஆழ்வார்பேட்டை, கோட்டூர் புரத்தில் இருக்கும் CM வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 3, 2025
உலகில் அதிகம் விற்பனையான டாப்-7 மொபைல்கள்

புதிதாக வாங்கிய மொபைலை நண்பர்களிடம் காட்டினால், என்னுடையது தான் பெஸ்ட் என்று ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு விவாதிப்பதுண்டு. ஆனால் உங்கள் மொபைல், உலகில் அதிகம் விற்பனையான டாப்-7 மொபைல்கள் பட்டியலில் இருக்கிறதா? இதில் பகிரப்பட்டுள்ள பட்டியலில் சில நாஸ்டாலஜிக் மொபைல்கள் உண்டு. நீங்கள் பயன்படுத்திய மொபைல் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க..
News October 3, 2025
மீண்டும் பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 4 சட்ட அமலாக்க அதிகாரிகள் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் வாகனம் சென்ற பாதையில் திட்டமிடப்பட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த செப்., 30-ம் தேதி குவெட்டாவில் நடந்த <<17875660>>வெடிகுண்டு விபத்தில்<<>> 10 பேர் உயிரிழந்திருந்தனர்.
News October 3, 2025
தமிழ்நாட்டில் eSIM சேவையை அறிமுகம் செய்த BSNL

BSNL வாடிக்கையாளர்களுக்கு eSIM வழங்கும் சேவையை தொடங்கியுள்ளது. டாடா தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவை வழங்கப்படுகிறது. நீங்கள் QR கோடை ஸ்கேன் செய்து உங்களது மொபைல் போனில் லிங்க் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 2G தொடங்கி 4G வரை இந்த eSIM-ஐ பயனர்கள் உபயோகிக்கலாம். இந்த சேவை முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.