News April 30, 2024
100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடு முழுவதும் உள்ள 100 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட சென்னை மற்றும் ஓசூரில் உள்ள பல தனியார் மருத்துவமனை உட்பட 100 இடங்களிலும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 27, 2026
நாளை JEE தேர்வு.. இதை மறக்காதீங்க

பொறியியல் படிப்புகளுக்கான JEE மெயின் முதற்கட்ட தேர்வு நாளை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். முதல் செஷன் காலை 9 முதல் 12 மணி, இரண்டாவது செஷன் மதியம் 3 முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது. இதில் ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாள அட்டை, பள்ளி ஐடி கார்டு ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள். 8 மணிக்கே தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.
News January 27, 2026
சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது, எனவே நல்ல முடிவெடுத்து பிப்., நடுவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என பிரேமலதா கூறியுள்ளார். யார் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தேமுதிக, தங்களது கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், நேற்று கவர்னர் தேநீர் விருந்தின்போது தேமுதிகவின் சுதீஷ், அதிமுக தலைவர்களுடன் பேசியது பேசுபொருளானது.
News January 27, 2026
உங்க உப்புல அயோடின் இருக்கா?

உடலில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கு, மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு அயோடின் மிக அவசியமாகும். இது நீங்கள் சாப்பிடும் உப்பில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒரு எளிய வழி உள்ளது. உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதில் உப்பை தூவி ஒரு நிமிடம் காத்திருக்கவும். அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை பிழியுங்கள். நீல நிறத்தில் உருளைக்கிழங்கு மாறினால் உப்பில் அயோடின் இருக்கிறது என அர்த்தம்.


