News September 6, 2025
மும்பையில் 34 இடங்களில் வெடிகுண்டு? மிரட்டியவர் கைது

மும்பையில் 1 கோடி மக்களை கொல்லும் வகையில் 34 இடங்களில் <<17621243>>வெடிகுண்டு <<>>வைத்துள்ளதாக கூறிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டாவைச் சேர்ந்த அஸ்வின் குமார் (50), பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ – ஜிகாதி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என கூறி, மும்பை போலீசாருக்கு வாட்ஸ்அப்பில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். மனைவியை பிரிந்து வாழும் அஸ்வின் குமார், ஒரு ஜோதிடர் ஆவார்.
Similar News
News September 6, 2025
நீரவ் மோடி, மல்லையாவை நாடு கடத்தும் பணிகள் மும்முரம்

நிதி மோசடி குற்றவாளிகளை நாடு கடத்தும் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் அதிகாரிகள் குழு, சமீபத்தில் திஹார் சிறையில் ஆய்வு செய்தனர். நீரவ் மோடி, மல்லையா UK-க்கு தப்பியோடிய நிலையில், இந்திய சிறைகளின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களை நாடுகடத்துவதற்கு பிரிட்டன் கோர்ட் தயக்கம் காட்டியது. இந்நிலையில், சிறப்பு வசதி செய்து தருவதாக பிரிட்டன் குழுவிடம் இந்திய அரசு உறுதியளித்துள்ளது.
News September 6, 2025
GPay, Phonepe பணத்துக்கு சிக்கலா? உடனே இதை செய்க

Gpay, Phonepe-ல தவறான நபருக்கு பணம் அனுப்பிட்டா, அத காந்தி கணக்குல எழுதவேண்டிய அவசியமில்ல. இந்த சிம்பிள் வழிகள் மூலம் பணத்த திரும்பப் பெறலாம் ▶நீங்க பணம் அனுப்புன நபரை தொடர்புகொண்டு பணத்த திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க ▶அந்நபர் மறுக்கும் பட்சத்தில் உங்களோட வங்கியில நீங்க முறையிடலாம் ▶புகார் கொடுத்தும் வேலை நடக்கலன்னா, NPCI-யோட இலவச எண் 1800-120-1740-க்கு அழைத்து புகாரளியுங்க. SHARE IT.
News September 6, 2025
முடி கருகருன்னு அடர்த்தியா வளர இந்த எண்ணெய் போதும்

நோயில்லாத வாழ்க்கைக்கு தினமும் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும் என சொல்வர். இத்தனை சிறப்பு மிக்க முருங்கையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வுக்கும் அருமருந்தாகிறதாம். முருங்கை விதைகளை காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, எடுத்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர முடி உதிர்வு குறையுமாம். SHARE.