News September 5, 2025
மும்பையில் 34 இடங்களில் வெடிகுண்டு? உச்சபட்ச அலர்ட்

மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு மெஸேஜ் வந்துள்ளது. லஷ்கர் – இ – ஜிகாதி என அறிமுகப்படுத்தி கொண்ட நபர் அனுப்பிய மெசேஜில், 14 பாக்., தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், 34 கார்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்படிருப்பதாவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 1 கோடி பேரை கொல்ல 400 கிலோ RDX வைக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News September 5, 2025
ராணி கேத்தரின் காலமானார்

பிரிட்டன் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான கென்ட் சீமாட்டி என்று அழைக்கப்படும் கேத்தரின் (92) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவர் அமைதியான முறையில் இயற்கை எய்தியதாக அரசக் குடும்பம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பேரனும், கென்ட் இளவரசருமான எட்வர்டை மணந்தவர் தான் கேத்தரின். பல அறப்பணிகளை இவர் செய்து வந்தார். RIP!
News September 5, 2025
Beauty: கரும்புள்ளிகளால் கவலையா? சரி செய்வது ஈஸி

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் காரணமாக சிலர் நம்பிக்கை இழக்கின்றனர். இதனை சரி செய்ய பல எளிய வழிகள் இருக்கின்றன. ➤எலுமிச்சை சாறை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம். ➤தூங்குவதற்கு முன் கற்றாழையை முகத்தில் தடவி, காலையில் கழுவவும் ➤மஞ்சள் மற்றும் பாலை சேர்த்து பேஸ்ட் போல கரும்புள்ளியில் தடவலாம். இதனை தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகள் நீங்கும் என கூறுகின்றனர். SHARE.
News September 5, 2025
பள்ளிக் கல்வித்துறை பாழடைந்துவிட்டது: அன்புமணி

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் 24 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பணியிடங்களை நிரப்புவதில் அரசு அலட்சியம் காட்டுவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.