News September 28, 2025

அரசியல் கூட்டங்களில் ரத்த வெள்ளம்.. இனியாவது மாறுமா?

image

அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மக்களின் உயிரையும் தியாகம் செய்ய அரசியல் தலைவர்கள் தயங்குவதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் மிகவும் பிரபலமானவர்கள்; எங்களுக்குத்தான் அதிக கூட்டம் வருகிறது என்பதை காட்ட, அரசியல் கட்சிகள் குறுகிய சாலைகளில் பெரும் கூட்டத்தை கூட்டுகின்றன. இதனால், பல உயிர்கள் பறிபோய், அவர்களின் குடும்பம் நிற்கதியற்று தவிக்கின்றன. கரூர் துயரத்திற்கு பிறகாவது இந்த நிலை மாறுமா என பார்ப்போம்.

Similar News

News January 2, 2026

ஜன.5-ல் கூட்டணி முடிவை எடுக்கும் பிரேமலதா

image

ஜனவரி 5-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று பிரேமலதா அறிவித்துள்ளார். இதுவரை, தேமுதிக கூட்டணி குறித்த முடிவை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் நிலையில், DMK அல்லது ADMK கூட்டணியில் தேமுதிக இணையுமா அல்லது தவெகவுடன் கைகோர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

News January 2, 2026

நேதாஜி பொன்மொழிகள்!

image

*வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது *உண்மையான நண்பனாக இரு அல்லது பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே *உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம் *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதிவெற்றிக்கு உரியவர்கள் *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்

News January 2, 2026

இந்தியாவில் புல்லட் ரயில்.. வந்தது அறிவிப்பு

image

நாட்டின் முதல் புல்லட் ரயில், 2027-ம் ஆண்டு ஆக.15-ல் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் வகையில் மும்பை-அகமதாபாத் இடையே 508 கிமீ., தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக சூரத் முதல் பிலிமோரா வரையில் ரயில் சேவை தொடங்கும் என கூறியுள்ளார். 2023-ல் முடிவடைய வேண்டிய பணிகள், 4 ஆண்டுகள் தாமதமாகியுள்ளன.

error: Content is protected !!